Saturday, July 11, 2026
No menu items!

News Line

சிறுமியை கடத்திய சிறுவன்..!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த  சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் (18) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும்  முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்...

நண்பனின் உயிரை பலியெடுத்த போதை..!

யாழ். தெல்லிப்பளை பகுதியில் போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு அவரது நண்பர் மீண்டும் போதைப்பொருள் கொடுத்த நிலையில், குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த 06 மாத காலமாகவே குறித்த இளைஞன்  போதைப் பொருள் பாவனையில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம்(18)  நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில்...

தனியாக வசித்துவந்த பெண்னொருவர் சடலமாக மீட்பு..!

அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்திலுள்ள  வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.  65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்றைய தினம்...

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மற்ற இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடமத்திய, வடமேற்கு, ஊவா,...

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் நிரஞ்சன் ஷா (Niranjan Shah) மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்தியா அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...

கொழும்பில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர்..!

கொழும்பில் 793 பேர்  போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க  பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலமே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு...

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது பாரத் லங்கா வீட்டுத்திட்டம்!

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்துக்கான 10,000 வீடுகளைக் கொண்ட பாரத் லங்கா வீட்டுத்திட்டம்  இன்றைய தினம் (19) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இணைந்துக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 1,300 வீடுகளின்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்..!

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளுக்கிடையிலான...

நாடு மீண்டும் வங்குரோத்து அடையும் ; சம்பிக்க ரணவக்க..!

நாட்டில் யார் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டாலும் எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளத்தாக தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும்,...

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு..!

கொழும்பு நீதிமன்றம்  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இன்று(19) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...