Monday, June 29, 2026
No menu items!

ரயில்

இந்த ஆண்டில் 86 தடவைகள் ரயில் தடம் புரண்டுள்ளது!

இந்த ஆண்டு (2024) இதுவரை 86 தடவைகள் ரயில் தடம் புரண்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் ஆதாரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் 139 தடவைகள் தடம் புரண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, மேலும் 2022 இல் பதிவு செய்யப்பட்ட ரயில் தடம் புரண்டவர்களின் எண்ணிக்கை 132 ஆகும். முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையில் 2021 இல் 115 மற்றும் 2020 இல்...

கடலோரப் பாதை ரயில் சேவை பாதிப்பு!

இன்று கொடைத்தீவு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இன்று காலை பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பாதையில் ஒரு ரயில் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் காரணமாக ரயில் சேவைகள் தாமதமாகும்...

ரயிலில் மோதி மூவர் பலி…!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.10) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும்...

ரயில் மோதியதில் தாயும் மகனும் பலி…!

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்று (11.10) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து...

ரயில் மோதி நபரொருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சீக்ரகாமி ரயில் மோதி இனந்தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிலிமத்தலாவை மற்றும் மித்தெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற காற்சட்டை , சாம்பல் நிற...

எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியது. எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டன, இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா...

தொடருந்து சேவைகள் இன்று இரத்து!

ரயில்வே LOCOMOTIVE ஒப்பரேட்டிங் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில் சேவைகள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு...

ஒரு லீட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோ மீட்டர் பயனிக்கும் என்று தெரியுமா?

ஒரு ரயிலின் மைலேஜைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணி அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான் . நாம் பொதுவாக வாகனம் வாங்கும்போது ‘எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும்?’ என்றுதான் முதலாவதாக கேட்போம். இதற்கான பதில் நமக்கு திருப்தி அளித்தால் மட்டும்தான், புதிய வாகனம் வாங்கியது மகிழ்ச்சியை கொடுக்கும். அதே நேரம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து,...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img