இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இந்தியா இலங்கை இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்தங்களுடன் எதிர்வரும் 20ம் நடைபெறவுள்ளது.
மேலும் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இலங்கை இந்தியாவிலுள்ள பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது என அகில பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார் பக்த அடியார்கள் அழைப்பு விடுத்துள்ளார். என்பது பற்றிய தகவல்களை எமது பிராந்திய செய்தியாளர் எமக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.