Tamil News Channel

கொழும்பில் இரண்டு நாட்களில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன..!

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு முறிந்து விழுந்த மரங்களில் ஆபத்தானவை அல்ல என அடையாளப்படுத்தப்பட்ட மரங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு நகர எல்லைக்குள் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts