February 9, 2026
சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை…
Updates புதிய செய்திகள்

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை…

Dec 2, 2023

உள்ளுர் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மரக்கறி வியாபாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மலையகம் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக உள்ளூர் சந்தையில் தேவைக்கேற்ப மரக்கறிகள் இல்லாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோ லீக்ஸ் ரூ 280/=, கத்திரிக்காய் ரூ.300/=, கரட் ஒரு கிலோ ரூ.450/=, தக்காளி ரூ.480/=, போஞ்சு ரூ.600/=,மிளகாய் ரூ.700/=, பச்சை மிளகாய் ரூ.1500/=, குண்டு மிளகாய் ரூ.2000/=என அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோ ரூ 400-500 வரை உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே காய்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் குறிப்பிட்டுனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *