யாழ். மேல் நீதிமன்றில் இன்று(24) நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையாகியுள்ளார்.
நல்லூர் சந்தியில் இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக யாழ்.மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்த நிலையில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று முன்னிலையாகியுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதகாப்புக்கு மத்தியில் அவர் நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






