Tamil News Channel

தவறான முடிவெடுத்து தற்கொலை…

death

கொழும்பு கம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும்  உயிரிழந்துள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts