Sunday, April 26, 2026
No menu items!

வெள்ளவத்தை

கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து – ஐவர் படுகாயம்..!!

பம்பலப்பிட்டிய மெரின் வீதியில் கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த  விபத்து இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற...

ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!!

காலி பிரதான வீதியில், வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான பகுதியிலும், ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரதபவனி காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த இரு பெண்கள் கைது!

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கைது...

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து T56 தாக்குதல் துப்பாக்கியொன்று மீட்பு!

கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து T56 தாக்குதல் துப்பாக்கி என நம்பப்படும் சந்தேகத்திற்கிடமான ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டது. 67 வயதான பெண் ஒருவர் தனது காரில் துப்பாக்கி அடங்கிய பையை வைப்பதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக...

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி- கைதான பெண்..!

2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பொதுமக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து, அவர்களிடம் இருந்து ரூ.1,340,000 மோசடி செய்ததற்காக கொழும்பை சேர்ந்த 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நாரஹேன்பிட்டி காவல்துறைக்கு மூன்று புகார்கள் கிடைத்ததை அடுத்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பு 05 ஐ வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்,...

உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களால் பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபா காசோலைகளை வழங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தொடுத்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில்...

தீயணைப்பு சேவை திணைக்களத்தின் ஊழியர்களுக்கு விடுமுறை இரத்து!

பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இன்று (13) முதல் (15) வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்தார். இதன்படி, தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, கிரேண்ட்பாஸ், வெள்ளவத்தை, கோட்டை மற்றும் மாதிவெல உப நிலையங்களில் உள்ள சுமார்...

வெள்ளவத்தை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்றைய தினம் (03.10) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. 40 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நீல நிற சட்டை மற்றும் நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று (03.10) பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவராத நிலையில், 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் எனவும் அவருக்கு  45 வயது இருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img