Tamil News Channel

படு தோல்வியின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணி

cricket

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(10)  அதிகாலை  05.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு அவர்களை வரவேற்க வருகைதந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்யம் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும், இலங்கை கிரிக்கெட்டை கைப்பற்ற முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பான அனைத்து உண்மைகளும் இரண்டு நாட்களில் பொது ஊடகங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டு, இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பொது பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த கார்களில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts