வெல்லம்பிடிய பகுதியில் குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் ஆறு வயதுடைய செஹன்சா என்ற சிறுமியியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில், பாட்டி மற்றும் சித்தியின் அரவணைப்பிலேயே சிறுமி இருந்துள்ளார்.
நேற்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருந்த வேளையில், இச்சம்பவம் இடம்பெற்றமை அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.