பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
பெருஞ்சீரகம் ஒரு வாசனை மற்றும் மூலிகை பொருளாகும். இதனை சோம்பு என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.
இதில் கல்சியம் , இரும்பு , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , பொட்டாசியம் , சோடியம் , வைட்டமின் சத்துகளான பி 1 , பி 2 , பி 3 , பி 6 , வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது.
அந்தவகையில் பெருஞ்சீரகம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
- பெருஞ்சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்கச் செய்வதில் பேருதவி புரிகிறது. எனவே நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது.
- பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஈஸ்டோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை சரிசெய்கிறது.
- பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும். அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.
- பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய்கால வலி மற்றும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
- பெருஞ்சீரகத்தில் மெக்னீசியம் சத்து அதிகம் நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட செய்கிறது. ஒரு சிலருக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் வியாதியையும் பெருஞ்சீரகம் குணப்படுத்துகிறது.
![]()