நாடாளுமன்றத்தில் நேற்று(21) நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதம் நடைபெற்றது.
அதில் இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் ஒரு போத்தல் சாராய விலையை 1500 ரூபாவாக குறைக்க முடியும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை எனவும் . மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடவுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.