யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் வாளால் வெட்டிய போது கீழே வீழ்ந்த தன் கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.