
ரூபாவின் பெறுமதி..!நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை முகாமை செய்வதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவான நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை சீரான மட்டத்தில் பேணுவதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.