ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 பணியாளர்களை நியமித்து அவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம், மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று 05 பகல் வேளையில் அவரை கைது செய்தது.
பின்னர் அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.








