ஒரு சிலருக்கு முழுவதுமாக சாப்பிட்ட பிறகும் கூட பசி இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். சாப்பிட்ட சில மணி நேரங்களில் பசி எடுப்பது போன்ற உணர்வு தோன்றுவது சாதாரணமானது தான். அதை குறித்து கவலை பட தேவையில்லை. ஆனால் முழுவதுமாக சாப்பிட்ட பிறகும் கூட பசி எடுப்பது ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதை இங்கு தெரிந்துகொள்வோம்.

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள்!​

  • நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி பசியை உணர்வார்கள். பொதுவாக உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை குளுக்கோஸ் ஆக மாற்றப்படுகிறது. ஆனால் நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு குளுக்கோஸ் ஆக மாறுவது கடினமாக உள்ளது. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு எளிதில் பசி ஏற்படலாம். அடிக்கடி தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றுவது போன்றவை நீரிழிவு பாதிப்பு இருப்பதன் காரணமாக ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.
இரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவு!​
  • இரத்தத்தில் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதன் காரணமாக அடிக்கடி பசி ஏற்படலாம். நமது உடலில் குளுக்கோஸின் அளவு குறையும்போது இது போன்ற பசிகள் தூண்டப்படுகின்றன. இது பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளை பாதிக்கிறது. சிலருக்கு சிறுநீரக கோளாறுகள் அல்லது கணைய பிரச்சனைகள் இருக்கலாம். இவர்களும் அதீத பசியை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமாக குடிப்பவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் அதிக பசி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
​பசியை தூண்டும் தூக்கமின்மை!​
  • நமது உடலுக்கு தினசரி தேவையான ஓய்வினை நாம் கட்டாயமாக கொடுக்க வேண்டும். இந்த ஓய்வினை உடலானது பெறாத போது அதீத பசி ஏற்படலாம். இதற்கு காரணம் நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகும். அதிக பசியில் இருக்கும் போது அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது. தூக்கமின்மையின் காரணமாக நமது உடல் நிலையானது மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமற்ற உணவு முறை!​
  • சில நேரங்களில் நாம் துரித உணவுகளை உட்கொள்வதால் கூட பசி ஏற்படலாம். மேலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது எளிதாக பசிக்காது. அதே நேரத்தில் ஊட்டச்சத்து குறைந்த உணவுகள் எளிதில் பசியை தூண்டுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நீண்ட நேரம் பசியை தூண்டாமல் இருக்க உதவும். உங்கள் உணவில் தினசரி காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது சிறந்தது. இதை தவிர நீங்கள் துரித உணவுகள் அல்லது ஸ்னாக்ஸ் போன்றவற்றை சாப்பிடும் போது உங்களுக்கு எளிதில் பசி அடங்காது.
கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி பசிக்கும்!
  • கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி பசி ஏற்படுவது சாதாரணமானது தான். இதற்கு காரணம் கர்ப்பிணி பெண்கள் உண்ணும் உணவு குழந்தைக்கும் போய் சேருகிறது. இதனால் அடிக்கடி பசி ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாலும் பசி ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது இந்த பசி அதிக அளவில் தூண்டபடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here