மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு நாளைய தினம் வரை செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய பகுதிகளில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here