குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் இன்று (07) காலை இந்த அமைதியின்மை ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







