கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கையின் தபால் திணைக்களம் நினைவு முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது.

205 மிமீ அளவுள்ள இந்த முத்திரை தற்போது உலகிலேயே மிக நீளமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க இந்த தனித்துவமான முத்திரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிவைத்துள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க முத்திரைக்கு மேலதிகமாக, ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் பௌத்த கலாச்சாரத்தைப் போற்றும் முத்திரைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் முதல் நாள் அட்டைகளின் தொகுப்பு தியவதன நிலமேக்கு வழங்கப்பட்டது.

இந்த பொருட்கள் ஸ்ரீ தலதா மாளிகை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும், இது பார்வையாளர்களுக்கு பிராந்தியத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பார்வையை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here