இன்று(29.10) காலை பயாகலவில் ரயில் பழுதடைந்ததால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இயந்திரக் கோளாறு காரணமாக ரயில் பழுதடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இன்று கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.








