காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
T56 வகை துப்பாக்கியால் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.
இந்த திடீர் தாக்குதல் தொடர்பாக கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.








