கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில் டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கும் நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கையில் மாவட்ட தொற்று நோய் பிரிவு வைத்தியர் க.ரஞ்சன் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றுநோய் பிரிவின் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.











