எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டுவிழா 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் வரவேற்பு உரையினை பிரான்ஸ் TNTR சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி அறிமுக உரையினை “ஒருவன்” செய்தித்தள முகாமையாளர் அ.நிக்ஸன் அவர்களும்,வெளியீட்டு உரையினை ஜீவநதி, கடல் ஆகிய சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன் அவர்களும், நிகழ்த்தவுள்ளதுடன், யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடகக் கற்கைகள் துறை தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் கருத்துரையை நிகழ்த்தவுள்ளார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








