சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட BMW மகிழுந்து தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பாதுகாப்பிலிருந்த நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஐப்பசி மாதம் (23) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








