இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’, ‘பகலில் ஒரு இரவு’ படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார்.

71 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவ மனையொன்றில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here