மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார். இந்த போட்டிக்கான தகுதி சுற்றே இன்று (ஜனவரி 10) நடைபெற்றது.
நடிகர் அஜித்குமார் தன்னுடைய 18 வயதிலேயே முதன் முதலில் ரேஸில் ஈடுபட்டார். இதற்கு பின்னர் சினிமாவிற்கு வந்துவிட்டதால் அவரால் சரிவர ரேசில் கலந்துக் கொள்ள முடியவில்லை.
இந்த நிலையிலேயே அவர் தற்போது நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தற்போது மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கி இருக்கின்றார். பின்னர் 2010ஆம் ஆண்டில் ஐரோப்பியன் 2 போட்டியிலேயே அவர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் கலந்துக் கொண்டார்.
இதற்கு பின்னர் அவர் எந்தவொரு போட்டியிலும் கலந்துக் கொள்ளவே இல்லை. இந்த நிலையிலேயே மீண்டும் ரேசிங்கில் களமிறங்கும் விதமாக சமீபத்தில் ஓர் ரேசிங் குழுவை அவர் உருவாக்கினார்.











