பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிந்த புதிய வரைபு நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபுவை குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, நேரடியாக நீதி அமைச்சரிடம் கையளித்தார்.








