“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தில் நேற்று (02.02.2025) வடமராட்சி கிழக்கு உடுத்துறை பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உடுத்துறை கடற்கரை பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை மருதங்கேணி  பொலிசார்  உடுத்துறை 10ம் வட்டாரம் கடற்தொழிலாளர்  சங்கத்துடன்  இணைந்து  துப்பரவு பணியை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி U.M.J.W.K அமரசிங்க,உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க தலைவர் கணேஸ்வரன்,வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன்,வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here