வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (20.08) அதிகாலை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுனியா இராணு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 54 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








