கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே அன்று (08.11.2024) விழுந்ததில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுர போலிஸார் வீதியின் குறுக்கே விழுந்த மரத்தினை உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர்.

அத்தோடு மீண்டும் போக்குவரத்து சுமுகமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.

மரம் விழுந்ததன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது மின் கம்பமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here