வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரசு கட்சியினால் இராணுவத்தை வெளியேற்றும் கோரிக்கையுடன் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந் நிலையில், சில பகுதிகளில் மட்டுமே போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை தொடர்ந்தது.
காலை சில இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கடைகள் திறந்திருக்கும் நிலையில் வணிகம் இயல்பு போல் நடைபெற்று வருகிறது.
அதேபோல், போக்குவரத்து சேவைகள், அரசு திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளும் வழக்கமான முறையில் செயல்பட்டு வருகின்றன.
(யாழ் நிருபர்-லோஜன் விஜய்குமார்)








