தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் அரச பேருந்துகளின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் யாழ் அரச பேருந்து சாலை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதற்கிணங்க இன்று அரச பேருந்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.









