2008 ஆம் ஆண்டு முதல் இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இன்று (29) வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட எம்.பி. ஆஜராகவில்லை.
இது தொடர்பில் அவரது வழக்கறிஞர் தெரிவிக்கையில்,
மனுவர்ண ஒரு தேசிய நில விநியோக விழாவில் பங்கேற்றதால் விசாரணைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு செல்லுபடியாகும் காரணமும் இல்லாததைக் காரணம் காட்டி, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








