எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்கு முன்னதாக இந்தத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த மாதத்தின் இரண்டாம் நாளிலிருந்து ஐந்து சதவிகிதக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை ரூ. 32 முதல் ரூ. 33 வரை அதிகரிக்க வேண்டும் என்றும் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here