இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதுரி நிரோசன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி தனது 31வது வயதில் இவர் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், அகில இலங்கை ரீதியில் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.

இளம் வயதில் நீதிபதியாக தெரிவாகி தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்த மாதுரி நிரோசனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here