கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றிற்க்கு  மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த  விமானம் கடந்த 19ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது மதியம் 12 மணியளவில் அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளதோடு, பயணிகள் அனைவரும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

2மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிஸார் அந்த விமானத்தை சோதனையிட்ட பின், அந்த விமானத்தில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விமான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here