ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் எலியொன்று புகுந்து கொண்டதனால் அதனை கண்டுபிடிக்க மூன்று நாட்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திலே இவ்வாறு எலி புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தில் எலியொன்று புகுந்துள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்ததனைத் தொடர்ந்து இந்த எலியை கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்கள் சென்றதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் எலியுடன் கடந்த 22ம் திகதி நாடு திரும்பியதாகவும் மூன்று நாள் முயற்சியின் பின்னர் எலி கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் பல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here