இலங்கையில் உள்ள சிறுவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்பது காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும். காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், உடல்வலி மற்றும் சோர்வு ஆகியவை இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகளாகும்.

இவ் அறிகுறிகளையுடையவர்கள் வைத்தியர்களை நாடி சிகிச்சைகளை பெறும்படி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here