மஹியங்கனை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இரவு வேளையில் பணிபுரிந்த சுமார் 25 பெண் தொழிலாளர்கள் அவசர ஒவ்வாமை காரணமாக மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹியங்கனை கெமுனுபுர ஆடை மண்டபத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த ஒவ்வாமைக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here