உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை மற்றும் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கான உரிமை இழக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்காக நியமனப் பத்திரங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
– 900,000 இற்கும் அதிகமானோர் வாக்களிக்கும் உரிமை இழப்பு
– உயிரிழந்த பின் நல்லடக்கம் செய்வதா? தகனஞ் செய்வதா?
– டிஜிட்டல் ஆளடையாளட்டை தொடர்பில் சட்டமூலத் திருத்தம் என இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.








