தேசிய மக்கள் சக்தி (NPP) ஒரு ஆணை மற்றும் ஒரு சமூக ஒப்பந்தத்துடன் வருகிறது என்று NPP பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (23.09.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, இன்று முதல் அதற்கான வேலைகளை NPP ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, ”நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை நிச்சயமாக” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் நாட்டைக் கட்டியெழுப்புவதில் NPP அரசாங்கம் அனுபவத்தைப் பெறும் என தெரிவித்துள்ளார்.







