எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களுக்கு ஆயத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பொதுவான கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று (23.09.2024) இடம்பெற்ற தலைமைத்துவ சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணிக்கான பிரேரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத் தேர்தல் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள உத்தேச கூட்டணியில் சேருமாறு அனைத்து எதிர்க்கட்சிகளையும், சமகி ஜன பலவேகயா (SJB) உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்குமாறு அவர் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.








