திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆணையாளருமான சர்மிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுயேச்சைக் குழுக்கள் உதவி ஆணையர் ஆர். சசிலன் மேற்பார்வையில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஒரு குழுவில் ஏழு பேர் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு குழுவும் 14,000 ரூபாவை வைப்பிலிட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.








