இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின்   உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள் .

அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் விரயம் முன்பாக வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை சிறப்பு அம்சம் என  வாகன சாரதிகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here