உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட MOP உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கும் பணி நேர்றையதினம் (16.12.2024) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கமநலசேவை நிலையத்தைச்சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும் மானாவாரி காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது.
பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட 5000ற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதுடன் சின்ன பல்லவராஜன் கட்டு கமக்காரர் அமைக்குற்பட்ட 145 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








