இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க, வாகனங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தனது பரிந்துரையை விளக்கினார்.
“மே-ஜூன் 2024 இல் நாங்கள் ஒரு பகுப்பாய்வு செய்தோம். அந்த நேரத்தில் ஒரு தேவை இருந்தது. 5 ஆண்டுகளாக புதிய வாகனங்களை கொண்டு வர அனுமதிக்கவில்லை. பொருளாதாரத்தின் செயல்திறன் மேம்படும் போது, நாட்டுக்கு புதிய வாகனங்கள் தேவை. தற்போதுள்ள வாகன சந்தையின் மதிப்பை அந்த அளவில் வைத்துக்கொண்டு வாகனத்தை புதுப்பிக்க விரும்பினால், புதுப்பிக்கும் நபர் கூடுதல் பணம் செலுத்தி, வாகனத்தைப் புதுப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது எனது பரிந்துரை.
முந்தைய மாற்று விகிதத்தையும் தற்போதைய மாற்று விகிதத்தையும் எடுத்துக் கொண்டால், மாற்று விகிதங்கள் நிறைய மாறிவிட்டன. கூடுதலாக, 18% VAT புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பிறகு இரண்டும் சேர்ந்தால் ஐந்து வருட பழமையான வாகனம் சந்தையில் 5 மில்லியன் மதிப்புடையதாக இருந்தால், புதிய வாகனம் கொண்டுவர அனுமதித்தால், பழைய வாகனங்கள் அனைத்தும் மதிப்பை இழந்து கடைசியில், அதிக எண்ணிக்கையில் புதிய தேவையற்ற வகையில் வாகனங்கள் நாட்டிற்குள் நுழைய ஆரம்பிக்கும். இல்லையெனில், இது சமநிலையில் செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் அதிகப் பணம் செலுத்தி வாகனத்தைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
நேற்று (ஜனவரி 06) ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.






