கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (16) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ஆலோசனை நாளை (17) காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி, கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும் என அந்த அறிவுறுத்தல் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here