பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (3/4/2025) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, “OT வீதத்தை மாற்றாதே”, “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”, “பதவி வெற்றிடத்தை உடனடியாக நிரப்பு” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.








