இலங்கையில் முதல் முறையாக, திருகோணமலைக் கடலில் நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவிற்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இலங்கை கடற்படையின் மலிமா ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் (MHS) இன் மலிமா டைவிங் கிளப், கடற்படை டைவிங் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, கலாச்சார விழாக்களை கடலுக்கடியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையை உலகத் தரம் வாய்ந்த டைவிங் இடமாக விளம்பரப்படுத்தும் அதே வேளையில், பாரம்பரியத்தைக் கொண்டாடும் விதமாக, டைவர்கள் நீருக்கடியில் பாரம்பரிய சடங்குகள் மற்றும் நாட்டுப்புற விளையாட்டுகளை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வு கலாச்சார ஒற்றுமை மற்றும் நாட்டின் கடல் சூழலின் அழகு இரண்டையும் எடுத்துக்காட்டுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.








