தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தெமட்டகொட காவல்துறையினரின் கூற்றுப்படி,

ஒரு ஸ்டேஷன் வேகன் மற்றும் ஆறு முச்சக்கர வண்டிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் தீப்பிடித்தன.

காவல்துறையின் அவசர தொலைபேசி எண் 119 க்கு வந்த அழைப்பின் பேரில், சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தெமட்டகொட காவல்துறையினர் உடனடியாக கிராண்ட்பாஸ் தீயணைப்பு படையினருடன் அவ்விடத்திற்கு வருகை தந்தனர்

தீயை அணைப்பதில் குடியிருப்பாளர்கள் உதவினர், இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்ய கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு மற்றும் அரசு பகுப்பாய்வாளர் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் சூழ்நிலைகள் சந்தேகத்தை எழுப்புவதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here